Published : 05 Feb 2015 11:47 AM
Last Updated : 05 Feb 2015 11:47 AM

பிஎஸ்என்எல் பேன்சி எண் பெற ஆன்லைன் ஏலம்

மொபைல் போன்களுக்கு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பேன்சி எண்களை பெற இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை ஆன்லைன் ஏலம் நடத்தப்படுமென்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பேன்சி மொபைல் எண்களை பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் சென்னை வட்டம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இதன்படி புதிய பேன்சி எண்களை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த ஏலம், பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) மதியம் 12 மணிக்கு தொடங்கி, 19-ம் தேதியன்று இரவு 12 மணிக்கு நிறைவு பெறும்.

இந்த ஏலத்தில் பங்கேற்க www.chennai.bsnl.co.in என்னும் இணையதளத்துக்கு செல்ல வேண்டும் என்று அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x