Published : 05 Feb 2015 11:47 AM
Last Updated : 05 Feb 2015 11:47 AM
மொபைல் போன்களுக்கு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பேன்சி எண்களை பெற இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை ஆன்லைன் ஏலம் நடத்தப்படுமென்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பேன்சி மொபைல் எண்களை பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்காக பிஎஸ்என்எல் சென்னை வட்டம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இதன்படி புதிய பேன்சி எண்களை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த ஏலம், பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) மதியம் 12 மணிக்கு தொடங்கி, 19-ம் தேதியன்று இரவு 12 மணிக்கு நிறைவு பெறும்.
இந்த ஏலத்தில் பங்கேற்க www.chennai.bsnl.co.in என்னும் இணையதளத்துக்கு செல்ல வேண்டும் என்று அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT