Published : 19 Feb 2015 11:21 AM
Last Updated : 19 Feb 2015 11:21 AM

கோபாலசமுத்திரம் சங்கரன்கோவில் சுற்றுச்சாலை பணி தொடங்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் – சங்கரன்கோவில் சாலையை இணைக்கும் சுற்றுச்சாலை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று அதிமுக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் நில எடுப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x