Published : 07 Feb 2015 05:36 PM
Last Updated : 07 Feb 2015 05:36 PM

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தற்கொலை

திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல்நலம் சரியில்லாததால் தற் கொலை செய்துகொண்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் கே.பி.கே. குப்பத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி குடும்பத்துடன் வசிக்கிறார். இவருக்கு ஆகாஷ் என்ற இனியவன் (26), பரசு (24) ஆகிய மகன்கள், உதயா என்ற மகள் உள்ளனர். சாமியின் மனைவி இறந்துவிட்டார். மகள் உதயாவுக்கு திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இனியவனுக்கும் திருமணமாகிவிட்டது. பிரசன்யா (23) என்ற மனைவி, இனியா (1) என்ற மகள் உள்ளனர்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச் சாரத்துக்கு கே.பி.பி.சாமி சென்றி ருந்தார். வீட்டில் இனியவன், அவரது மனைவி, மகள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு மாடி அறையில் இனியவனும், கீழ் தளத்தில் அவரது மனைவி, குழந்தையும் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை பொழுது விடிந்து வெகுநேரமாகியும் இனியவன் கீழே வரவில்லை. மனைவி பிரசன்யா மாடிக்குச் சென்று அறைக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அழைத்துப் பார்த்தும் பதில் இல்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது கணவர் இனியவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார்.

சத்தம் கேட்டு, அருகே இருந்த வர்கள் ஓடிச் சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இனியவனை இறக்கி, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திருவொற்றி யூர் போலீஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக் கப்பட்டது.

இதற்கிடையே, சம்பவம் பற்றி கே.பி.பி.சாமிக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பினார். உடல்நலம் சரியில்லாததால் இனியவன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x