Published : 19 Feb 2015 03:15 PM
Last Updated : 19 Feb 2015 03:15 PM

கோவையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது

பொள்ளாச்சி அருகே மாப்பிள்ளைக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (25). தனியார் நிறுவன வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், அதே ஊரைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணை, கடந்த ஓராண்டாக காதலித்து வந்தாராம்.

இந்நிலையில், தங்கராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்தப் பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், தங்கராஜை கைது செய்தனர்.

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (போஸ்கோ), பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து, பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x