Published : 11 Feb 2015 10:26 PM
Last Updated : 11 Feb 2015 10:26 PM
போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்காக சென்னையில் 11 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''பிப்ரவரி 16 -ம் தேதி அன்று தமிழக அரசிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்படும். நோட்டீஸ் அளித்த ஒரு மாதத்துக்குள் வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைக்காததால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யும் திட்டம் இருக்கிறது. '' என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT