Published : 10 Feb 2015 10:55 AM
Last Updated : 10 Feb 2015 10:55 AM

பிழைகள் ஏற்படுத்தும் விளைவுகள்

தமிழ்ப் பாடநூல்களில் உள்ள பிழைகள் பற்றிய (‘இவ்வளவு பிழைகளா, நம் பாட நூல்களில்?’) கட்டுரை அதிர்ச்சி தந்தது.

இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படும் என்பதுடன் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்திருக்கிறார்களா? பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல; போட்டித் தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோரும் இந்தப் பாடநூல்களையே படிக்கின்றனர்.

அவர்களும் தவறான விடையைத்தான் எழுதுவார்கள். இதற்குக் காரணமாக இருக்கும் பாடநூல்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றங்களில் அவர்கள் வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்.

- த.சுரேஷ்பாபு,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x