Published : 07 Feb 2015 11:00 AM
Last Updated : 07 Feb 2015 11:00 AM

திருவான்மியூரில் நள்ளிரவில் ஏடிஎம்-மில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது

திருவான்மியூரில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் இந்தியன் வங்கி உள்ளது. வங்கியின் அருகிலேயே ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பெரிய கல்லை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. சாலையில் சென்ற சிலர் இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையடுத்து ரோந்து போலீஸார் விரைந்து வந்து மர்ம நபரை பிடித்தனர். மது போதையில் இருந்த அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பெயர் ஆறுமுகம் (32) என்பதும், திருவான்மியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x