Published : 27 Feb 2015 10:17 AM
Last Updated : 27 Feb 2015 10:17 AM
சென்னையில் ஒரே நாளில் 14 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
நொளம்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜவகர் சிந்தாதிரிப் பேட்டை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இளங்கோ அண்ணாநகர் குற்றப் பிரிவுக்கும், அண்ணாநகர் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஸ் வரன் குமரன் நகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வேலு மணி மயிலாப்பூர் குற்றப்பிரிவுக் கும், மயிலாப்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்ரமணி விருகம் பாக்கத்துக்கும், விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த ஜெயராஜ் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், திருவேற்காடு சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தேனாம்பேட்டை குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட் டுள்ளனர்.
குமரன் நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் நுங்கம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும், நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆதம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், ஆதம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த தளவாய் சாமி தாம்பரம் குற்றப்பிரிவுக்கும், தாம்பரம் குற்றப்பிரிவில் இருந்த ஹரி ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் அழகு உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவுக்கும், கிருஷ்ணகுமார் திருவேற்காடு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், சண்முகம் நொளம்பூர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT