Published : 16 Feb 2015 03:05 PM
Last Updated : 16 Feb 2015 03:05 PM

நின்றார்கள்.. நடத்தினார்கள்.. வென்றார்கள்..- ட்விட்டரில் ராமதாஸ் கருத்து

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகளை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!" என கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவரும் நிலையில் ட்விட்டரில் ராமதாஸ் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x