Published : 20 Feb 2015 10:49 AM
Last Updated : 20 Feb 2015 10:49 AM

உரிமை பாதிப்பு

‘பெருநிறுவனங்கள் தீர்மானிப்பதல்ல இணையச் சுதந்திரம்!' தலையங்கம், ஏர்டெல் செய்தால் தவறு, ரிலையன்ஸ் செய்தால் சரி என்கிற மனநிலை தவறு என்பதைச் சுட்டிக்காட்டிய விதம் அருமை.

ஃபேஸ்புக் ரிலையன்ஸ் கூட்டுத் திட்டத்தால் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் சதவீதம் கூடும் என்றாலும், நாம் நினைத்த தளங்களைப் பயன்படுத்தும் வசதி இல்லாது ரிலையன்ஸ் நினைக்கும் தளங்களையே நாம் பயன்படுத்த முடியும் என்பது நம்முடைய உரிமையைப் பாதிப்பதாகவே அமையும்.

எனவே, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் இதனை உடனடியாக ஒழுங்குபடுத்த வேண்டும்.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x