Published : 10 Feb 2015 10:14 AM
Last Updated : 10 Feb 2015 10:14 AM

கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையிடம் 8 பவுன் பறிப்பு

சென்னையில் ஆசிரியையிடம் கத்திமுனையில் 8 சவரன் நகைகளை பைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டனர்.

சென்னை துரைப்பாக்கத்தில் பட்டப் பகலில் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கத்தியைக் காட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நீராவி முருகனையும் அவரது கூட்டாளிகளையும் சமீ பத்தில் போலீஸார் பிடித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மீண்டும் ஆசிரியை யிடம் கத்திமுனையில் நகை பறிக்கப் பட்டுள்ளது. சென்னையை அடுத்த குரோம்பேட்டை அருகே சிட்லபாக்கம் பிரதான சாலையில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி பிரியதர்சினி (29), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை 5.45 மணியளவில் பால் வாங்குவதற்காக வீட்டருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், பிரியதர்சினி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம் என 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

அதிகாலை என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதை கவனித்த கொள்ளையர்கள், சரியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x