Published : 03 Feb 2015 10:35 AM
Last Updated : 03 Feb 2015 10:35 AM

இலங்கை அகதிகளிடம் ரூ.10 லட்சம் மோசடி

கனடா நாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக இலங்கை அகதி ஒருவர் குடும்பத்துடன் வந்து காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இலங்கை வவுனியாவைச் சேர்ந்தவர் செல்வராஜா. இவரது மனைவி மகேஸ்வரி இவர்களுக்கு தர்சிகா என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2007 ம் ஆண்டில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் சிலருடன் செல்வராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தார்.

பின்னர் செல்வராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், "2009 ம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்னையில் சினிமா இயக்குநராக இருப்பதாக கூறினார். கனடா நாட்டில் தெரிந்தவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதா கவும், கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் ராஜ்கபூர் கூறினார். அதை நம்பி நான் உட்பட 3 பேர் மொத்தம் ரூ.10 லட்சம் பணத்தை ராஜ்கபூர் மற்றும் அவரது உறவினர் ஜெகன் ஆகியோரிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x