72 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை

72 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
Updated on
1 min read

கச்சத்தீவு மற்றும் முல்லைத் தீவு கடற்பகுதிகளில் தமிழக மீனவர்கள் 72 பேரை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

நாகப்பட்டினத்தை சார்ந்த 5 விசைப்படகுளில் இருந்த 43 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வியாழக்கிழமை மாலையும், முல்லைத் தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த 29 மீனவர்களும் 4 விசைப்படகுகளும் வியாழக்கிழமை இரவும் 30 இலங்கை கடற்படையினரால் தனித்தனியாக சிறைபிடிக்கப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே சிறை பிடிக்கப்பட்ட 43 மீனவர்களை பருத்தி துறை நீதிமன்றத்திலும், முல்லைத் தீவு கடற்பரப்பில் சிறைப்பிடிக்கப்பட்ட 29 மினவர்கள் திரிகோணமலை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட பின்னரே சிறையில் அடைக்கப்படுவார்களா அல்லது நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவார்களா என்பது தெரியவரும்.

இலங்கையில் புதியதாக அதிபர் சிறிசேனா பதவியேற்றதற்கு பின்னர் நடைபெற்ற முதல் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு இது.

முன்னதாக கடந்த ஒரு மாத காலமாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ள நிலையில் இந்த சிறைப்பிடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in