Published : 19 Feb 2015 10:09 AM
Last Updated : 19 Feb 2015 10:09 AM

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்: இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக் கோரியும் வழக்கறிஞர்கள் இன்றும், நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடந்த 2009 பிப்ரவரி 19-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆண்டுதோறும் பிப்ரவரி 19-ம் தேதி கறுப்பு தினமாக வழக்கறிஞர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதியான இன்று கறுப்பு தினமாக அனுசரிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும், உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப வலியுறுத்தி நாளையும் (20ம் தேதி) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழ கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, நீதிபதி பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கறிஞர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x