Published : 16 Feb 2015 12:40 PM
Last Updated : 16 Feb 2015 12:40 PM

ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது: பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு குறித்து அவர் அளித்த பேட்டியில், "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தோம். மத்தியில் ஆளும் பாஜக அரசால் மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை விளக்கினோம்.

ஸ்ரீரங்கத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் பிரதமரின் மாதிரி நகர திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் தரம் உயர்த்தப்படும் எனக் கூறினோம்.

ஆனால், எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அவகாசம் போதவில்லை. தேர்தல் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது. விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவர் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதது ஏமாற்றமே" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x