Published : 08 Feb 2015 11:33 AM
Last Updated : 08 Feb 2015 11:33 AM

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்: 3 மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம்

தமிழகத்தில் தற்போது காகித வடிவில் உள்ள குடும்ப அட்டை களுக்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரேஷன் கார்டுகள் காகிதத்தில் இருப்பதால் போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய நுகர் வோர் அமைச்சகம் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு அறிவித்தது.

இந்த திட்டத்தை முதற்கட்ட மாக தமிழகம் உட்பட 11 மாநிலங் களில் அமல்படுத்துமாறு வலியுறுத் தியது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த மாக புதிய ரேஷன் கார்டு வழங்கப் படவில்லை. இதனால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகளில் அந்தந்த ஆண்டுக் கான உள்தாள் ஒட்டப்பட்டு வரு கிறது. இந்த ஆண்டுக்கான உள் தாள் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரு வதற்கான அனைத்து முயற்சி களுக்கும் மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை தயாரிக்கும் திட்டப்பணியை ஆம்னி அகேட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மாநில உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் ஆம்னி அகேட் நிறுவனம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை சுருக்க குறீ யிடான க்யூ.ஆர் (QR CODE) முறையில் கொண்டுவர திட்ட மிட்டுள்ளது. இந்த க்யூ.ஆர் முறையில் வடிவமைக்கப்பட உள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிளாஸ்டிக் அட்டையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“கியூ. ஆர் முறையில் கொண்டு வரப்படவுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்துக்கு ரூ.318 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மூன்று மாதத்தில் சோதனை முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சோதனை முறை திட்டம் முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப் படும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப் படும். தற்போதுள்ள ரேஷன் கார்டில் பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்படுவது போல் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உணவு பொருட்களின் எடை அளவு குறிப்பிடப்பட்டு ரசீது போல் வழங்கப்படும். அல்லது செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்ப தலைவர், தலைவி புகைப்படங்கள் இடம் பெறுவது குறித்து அரசு முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x