Published : 21 Feb 2015 08:59 AM
Last Updated : 21 Feb 2015 08:59 AM
கிருஷ்ணகிரி அருகே வங்கியில் நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், வங்கதேசத்துக்கு தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே வேப்பனப்பள்ளி சாலையில் உள்ள ராமாபுரத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் குந்தாரப்பள்ளி கிளை உள்ளது. இந்தக் கிளையில் கடந்த மாதம் 24-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6,033 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க கிருஷ்ணகிரி எஸ்பி கண்ணம்மாள் தலைமையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப் படையினர் கர்நாடகம், ஆந்திரம், ஜார்க்கண்ட், பிஹார், மேற்குவங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் 25 நாட்களாக முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
1,000 பேரிடம் விசாரணை
1000-க்கும் அதிகமானோரிடம் விசாரித்தும், வங்கிக் கொள்ளை தொடர்பாக எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. வங்கி அமைந் துள்ள குந்தாரப்பள்ளி, ராமாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட 11 பேரிடம் தனிப் படை யினர் விசாரணை நடத்தினர். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள குவாரி கள், தொழிற்சாலைகள் மற்றும் சாலையோர வியாபாரத்தில் ஈடு பட்டுள்ள வடமாநிலத்தவர்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப் படையினரிடம், வங்கிக் கொள்ளை யில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் நடத்திய விசாரணை யில், தனிப் படையினர் வடமாநிலங் களில் முகாமிட்டுள்ளதை அறிந்த வங்கிக் கொள்ளைக் கும்பல், வங்கதேசத்துக்கு தப்பிவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறியதாவது:
கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தனிப் படையினர் இரவு- பகலாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகாமிட்டிருந்த தனிப் படையினரிடம், வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ளார். அவருக்கு, ஏற்கெனவே ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளையர்கள் வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அவர்களைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT