Published : 17 Feb 2015 02:59 PM
Last Updated : 17 Feb 2015 02:59 PM

முதல்வர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்த ஓ.பி.எஸ்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த முறை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் முதல்வர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பின்னர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று (டிசம்பர் 2014) முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அக்கூட்டத்தொடரில் முதல்வர் இருக்கையில் பன்னீர்செல்வம் அமரவில்லை. மாறாக நிதியமைச்சர் அமரும் இருக்கையில் தான் அமர்ந்திருந்தார். அவரது இந்தச் செயல் தமிழக அரசியல் கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளானது.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் இருக்கையை புறக்கணித்ததால், இந்தக் கூட்டத்தொடரில் அவர் எங்கு அமர்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த முறை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் முதல்வர் இருக்கையிலேயா அமர்ந்தார். ஆனால், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் நீண்ட இருக்கையின் நடுப்பகுதியில் தாரளமாக உட்காராமல், இருக்கையின் ஓரப் பகுதியில் அமர்ந்திருந்தார். அந்த இருக்கைகுரிய மேஜை மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x