Published : 01 Apr 2014 01:15 PM
Last Updated : 01 Apr 2014 01:15 PM

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை இரவு தாக்கியதில் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 10-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை அறுத்து வீசினர். 5-க்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளை தங்களது ரோந்துப் படகுகளைக் கொண்டு மோதினர். இதில் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கப் பிரநிதி எமிரேட் விசைப்படகும் பலத்த சேதம் அடைந்தது.

கரைசேர்ந்த 2 தமிழக மீனவர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த செல்வராசு மற்றும் அவரது மகன் கரன் ஆகிய இருவரும் கோடியக்கரையில் இருந்து திங்கள் கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.படகில் எரிபொருள் தீர்ந்த நிலையில் கடலில் தத்தளித்த அவர்களை இலங்கை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x