Published : 12 Feb 2015 11:35 AM
Last Updated : 12 Feb 2015 11:35 AM

தேமுதிக எம்எல்ஏ-வுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தேமுதிக எம்எல்ஏ நல்லதம்பிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும், மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாலசுந்தரம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலா முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனால் இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ நல்லதம்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து வழக்கை தள்ளுபடிசெய்து நீதிபதி மாலா உத்தரவிட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x