Published : 11 Feb 2015 03:51 PM
Last Updated : 11 Feb 2015 03:51 PM

இடைத்தேர்தலுக்காக ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை

வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் ஸ்ரீரங்கத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி பழனிச்சாமி இந்த விடுமுறையை அறிவித்தார்.

13-ம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எதுவும் இயங்காது.

மாலை 6 மணி முதல் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. 13-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x