Published : 19 Feb 2015 10:05 AM
Last Updated : 19 Feb 2015 10:05 AM

சென்னையில் ஜெயம் கலை விழா 23-ல் தொடக்கம்

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 23 முதல் 25 வரை ‘ஜெயம் கலை விழா 2015’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வீணை ஈ.காயத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:

கலை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் தேவா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நிறைவு நாள் விழாவில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த விழாவில், வீணை இசைக்கலைஞர் ரங்கநாயகி ராஜகோபாலனுக்கு ‘ஜெயம் விருது’ வழங்கப்படுகிறது. கலை விழாவையொட்டி பல்வேறு கல்லூரி மாணவ -மாணவிகளுக் கான இசை, நடனம் மற்றும் கவின்கலைப் போட்டிகள் நடை பெறவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x