Published : 06 Feb 2015 09:16 PM
Last Updated : 06 Feb 2015 09:16 PM
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மீனவர்கள் நாளை நடத்த இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் கோரிக்கை எழுப்பினர். கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில், கடலூரில் மீனவர்களுடன் அமைச்சர் சம்பத், மீன்வள ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மீன்வள ஆணையர் பியூலா ராஜேஷ் , ''முகத்துவாரம் தூர்வாறும் பணி அடுத்த 6 மாதத்தில் துவங்கும். இதற்காக 10 கோடிஒதுக்கப்பட்டுள்ளது'' என கூறினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்துவதை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT