Published : 16 Feb 2015 10:33 AM
Last Updated : 16 Feb 2015 10:33 AM

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் மோடி உறுதி: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியா வரவுள்ளார். இதற்கு தமிழகத்தில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இது தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். இது நல்ல விஷயமல்ல.

மேலும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகவுள்ளார். பாஜகவும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இலங்கை அதிபரின் இந்திய வருகை இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும். இதனால் அங்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x