Published : 17 Feb 2015 10:06 AM
Last Updated : 17 Feb 2015 10:06 AM

பிப். 22-ல் வனச்சீருடை பணியாளர்கள் தேர்வு: இன்று முதல் நுழைவுச் சீட்டு ஆன்லைனில் கிடைக்கும்

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இது குறித்து தமிழ்நாடு வனத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் வனத்துறை மற்றும் வனக் கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 200 வனவர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது. முதல் தாள் (பொது அறிவு) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், 2-ம் தாள் (பொது அறிவியல்) பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

இத்தேர்வில் பங்கேற்க 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் www.forests.tn.nic.in மற்றும் http://forest.examsonline.co.in ஆகிய வனத்துறை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x