Published : 17 Feb 2015 09:14 AM
Last Updated : 17 Feb 2015 09:14 AM

இளம் படைப்பாளியின் படைப்புக்கு ரூ. 1 லட்சம் பரிசு: எழுத்து அறக்கட்டளை அறிவிப்பு

எழுத்து அறக்கட்டளை சார்பில் புதிய- இளம் படைப்பாளிகளின் படைப்புகள் நூல்களாக வெளியிடப்படவுள்ளன.

இதுதொடர்பாக அறக்கட்டளை அறங்காவலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை விவரம்:

எழுத்து அறக்கட்டளையின் நூல் வெளியீட்டுக்கான படைப்பு களைத் தேர்ந்தெடுக்க, தமிழ் இலக்கியவாதிகள் 3 பேர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் படைப்பின் 2000 பிரதிகளை வெளியிடும் முதற்பதிப்பின் முழுச் செலவையும் எழுத்து அறக்கட்டளையே ஏற்றுக் கொள்ளும்.

மேலும், முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்கு ரூ. 1 லட்சம் சிறப்புப் பரிசு வழங்கப்படும். முதல் சுற்றுக்கான படைப்புகளை 3சி, எல்டோராடோ, 112-நுங்கம் பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை- 34 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x