Published : 20 Feb 2015 09:53 AM
Last Updated : 20 Feb 2015 09:53 AM
லாரிகளில் கூடுதல் பாரம் ஏற்று வது, சாலை விபத்துகளை குறைப் பதற்கான முத்தரப்புக் கூட்டத்தை நடத்தாத போக்குவரத்து அமைச் சரை பதவி நீக்கம் செய்வது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.24-ல் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளிப்பது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் முடிவெடுத் துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்க பெருமாள் கோயில் பகுதியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அரசு நிர்ணயித்த அளவைவிட லாரிகளில் கூடுதல் பாரம் ஏற்றுவதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற் றுகையிட்டும் நடவடிக்கை இல்லாததால், அவரை மாற்றுதல், லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை தடுத்து நிறுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், லாரி உரிமையாளர்கள் வரும் 24-ம் தேதி கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, காஞ்சி மாவட்ட தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் யுவராஜ் கூறியதாவது: சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசின் மணல் குவாரி களில் லாரி உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிக மான பாரத்தை ஏற்றுகின்றனர். அதிக பாரம் ஏற்றி வருவதாக லாரிகளை போலீஸார் மடக்கிப் பிடித்து வழக்கு பதிவு செய்து அபராதமும் வசூலிக்கின்றனர். அதிக பாரம் ஏற்றக் கூடாது என அரசே வலியுறுத்துகிறது.
ஆனால், அதே அரசு அதிக பாரத்தை ஏற்ற கட்டாயப் படுத்துகிறது. இதனால் நாங்கள் செய்வதறியாத நிலையில் உள் ளோம்.
சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் லாரி உரிமையாளர்கள் என 3 தரப்பினரையும் இணைத்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதுவரை போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்தரப்பு கூட்டத்தை நடத்தவே இல்லை. இதனால், முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என போக்குவரத்து அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டோம்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24-ம் தேதி தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT