Published : 05 Feb 2015 07:22 PM
Last Updated : 05 Feb 2015 07:22 PM

பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆற்றில் 8 பேர் குளித்துக்கொண்டிருந்தபோது எந்த வித முன்னறிவிப்பும் இன்றி கதவணை - 2 திறந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் மீட்கப்பட்டனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2 பேர் உயிழந்தனர். வெள்ளத்தில் மூழ்கி இறந்த ஜன்னத் நிஷா, நிலாஃபர் ஆகிய இருவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x