Published : 11 Feb 2015 06:45 PM
Last Updated : 11 Feb 2015 06:45 PM

சதியும் விதியும் ஜெயலலிதா செயலாலே வந்துள்ளது - ஸ்டாலின்

'சதியும் விதியும் ஜெயலலிதா செயலாலே வந்துள்ளது' என்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

திமுக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்து பேசுகையில், '' ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டதால் வந்ததுதான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல். ஊழல் வழக்கில் 4ஆண்டுகள் சிறை, 100கோடி ரூபாய் அபராதம் விதித்ததால் ஜெயலலிதாவின் பதவி போனது.

பாரம்பரியம் மிக்க ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கரும்புள்ளி ஏற்படுத்திவிட்டார் ஜெயலலிதா. சதியும், விதியும் அவரது செயலாலே வந்துள்ளது.

4 ஆண்டு ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் மக்கள் தீர்ப்பளிக்கவேண்டும்.'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x