Published : 05 Feb 2015 10:57 AM
Last Updated : 05 Feb 2015 10:57 AM

ஸ்ரீரங்கத்தில் 9-ம் தேதி முதல் ஸ்டாலின் 3 நாள் பிரச்சாரம்

ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து 9-ம் தேதி முதல் 3 நாட்கள் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

இடைத்தேர்தல் நடக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சோமரசம்பேட்டை, தீரன் நகர், சத்திரப்பட்டி, சமுத்திரம், மறவனூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான இடங்களில் அவர் பேசுகிறார்.

மறுநாள் 10-ம் தேதி அந்தநல்லூர் ஒன்றியத்தில் பிரச் சாரம் செய்கிறார். பிரச்சாரத்தின் இறுதி நாளான 11-ம் தேதி ரங்கம் பகுதியில் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், அன்று மாலை ரங்கம் ராஜகோபுரம் அருகில் நடக்கும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x