Published : 06 Feb 2015 03:08 PM
Last Updated : 06 Feb 2015 03:08 PM
பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவிக்க வேண்டும் என விழுப்புரம் நகர, மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் நகர, மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் 15-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள பாமக அரசியல் எழுச்சி மாநாட்டுக்கு 600 வாகனங்களில் செல்வது, மாநாட்டில் பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாசை அறிவிக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை பெற்றுத்தரவும், இந்த ஆண்டு அரவைப் பருவத்துக்கு அரசு அறிவித்துள்ள தொகையை தனியார் ஆலைகளிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்கஜோதி, முன்னாள் எம்எல்ஏ கலிவரதன், துணைத்தலைவர் அன்புமணி, செயற்குழு உறுப்பினர் ஹரிகரன், நகரச் செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT