Published : 16 Feb 2015 10:07 AM
Last Updated : 16 Feb 2015 10:07 AM

மேல்மலையனூர் கோயிலில் மாசி திருவிழா நாளை தொடக்கம்

மேல்மலையனூரில் உள்ள அங் காளம்மன் கோயில் மாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மேல்மலையனூர் அங்காளம் மன் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை (பிப்.17-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 18-ம் தேதி காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் மயான கொள்ளையும், இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.

23-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேர் வீதி உலா நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x