Published : 16 Feb 2015 10:31 AM
Last Updated : 16 Feb 2015 10:31 AM

குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

குரூப்-2 தேர்வுகளுக்கான முடிவுகள் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பொறுப்பு தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நேற்று நடைபெற்றன. அங்கன் வாடி மேற்பார்வையாளர், கர்ப்பிணி பெண்களுக்கான அரசுத் திட்டங்களின் மேற்பார்வையாளர் ஆகிய பொறுப்புகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படும் இந்த தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 6 மையங்களில் நடைபெற்றது.

சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் சி.பாலசுப்ரமணியன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு முடிவுகள் 2 வாரங்களில் வெளியிடப்படும். குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படலாம். தமிழகத்தில் 117 குழந்தைகள் மேம்பாடு திட்ட அதிகாரி காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு 4,446 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,009 பேர் இந்த தேர்வை எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வின் முடிவுகள் ஒன்றரை மாதங்களில் வெளி யிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x