Published : 20 Feb 2015 09:34 AM
Last Updated : 20 Feb 2015 09:34 AM

7-ம் கட்ட விசாரணையை முடித்தார் சகாயம்: முறைகேடு குறித்து பதிலளிக்க கிரானைட் அதிபர்கள் மறுப்பு

கிரானைட் அதிபர்கள் தரப்பில், ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரணை ஆணையம் முன் ஆஜ ராக வழக்கறிஞர்கள், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் விளக்கமளிக்க மறுத் தனர். இதையடுத்து சகாயம் 7-ம் கட்ட விசாரணையை முடித்தார்.

மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி சகாயம் கடந்த ஆண்டு டிச.3 முதல் விசாரித்து வருகிறார். அவர் முறைகேடு நடைபெற்ற குவாரிகளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய், கால்வாய் மற்றும் தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சகாயம் தனது 7-வது கட்ட விசாரணையை பிப். 16-ல் தொடங் கினார். விசாரணையின் 4-வது நாளான நேற்று ராஜசேகரன், பெரிய கருப்பன், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ராஜசேகரன் சார்பில் வழக்கறிஞர் சண்முகம் நேரில் ஆஜராகி, கிரானைட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பதில் கூற முடியாது எனக்கூறி சகாயத்திடம் மனு வழங்கினார். பெரியகருப்பன் கிரானைட் சார்பில் வழக்கறிஞர் முத்து ஆனந்தகிருஷ்ணன் ஆஜரானார். அவர், நாங்கள் உரிமம் பெற்ற பகுதியில் மட்டும் கிரானைட் வெட்டி எடுத்தோம். எங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிரானைட் முறைகேடு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விளக்கம் தர முடியாது என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

ஒலிம்பஸ் கிரானைட் சார்பில் வழக்கறிஞர் அர்ஜுனன் ராஜன் ஆஜராகி, சம்மனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த உத்தரவு நகல் வரவில்லை. உத்தரவு நகல் வந்த பிறகே பதிலளிக்க முடியும் எனக் கூறி மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து விசாரணையை சகாயம் முடித்துக்கொண்டார். பின்னர் அவர் விமானத்தில் சென்னை சென்றார். அவர் 8-ம் கட்ட விசாரணையை அடுத்த வாரம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் வதற்காக விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியை சகாயம் முடுக்கிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x