Published : 06 Feb 2015 10:56 AM
Last Updated : 06 Feb 2015 10:56 AM
சட்டக் கல்லூரி மாண வர்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள்தான் பாதிக்கப்படுகி றோம் என காவல்துறையைச் சேர்ந் தவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
கடந்த 12-11-2008 அன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவர்கள் மோதல் விவகாரத்தில் காவல் துறையினரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்துக்கு உள் ளானது. மோதலைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்ததே, கலவரம் பெரிதாகக் காரணம் என பலரும் அப்போது விமர்சித்தனர்.
ஆனால், பெரிய பெரிய அரசியல் கட்சிகளின் போராட்டங் களையெல்லாம் இலகுவாக எதிர்கொள்ளும் தங்களுக்கு, சட்டக் கல்லூரி மாணவர் போராட் டங்களை எதிர்கொள்வது மட்டும் மிகுந்த சவாலாக உள்ள தாக காவல்துறையைச் சேர்ந்த வர்கள் கூறுகின்றனர். “அந்த மாண வர்களின் போராட்டம் மிகவும் சென்சிட்டிவ்வாக மாற்றப்படுவதே இதற்கு காரணம். நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது கூட சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் காவல் துறையினர் பொறுமை காத்தனர். பொதுமக்களுக்கான பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே சென்றதால் வேறு வழியே இல்லாமல்தான் தடியடி நடத்தி சாலை மறியலை முடி வுக்கு கொண்டு வர நேர்ந்தது. மாணவர்களில் சிலர் காய மடைந்தது போல, அவர்கள் நடத்திய கல்வீச்சில் போலீஸாரும் காயமடைந்தனர்.
ஆனால், அப்படி இருந்தும் கூட இன்று எல்லோரும் காவல் துறையினரைத்தான் கண்டிக்கின்ற னர். 4 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைபட்டு பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு களைப் பற்றி யாரும் பேச வில்லை. அமைதியை நிலைநாட்டு வதற்காக நாங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளை குறை கூறுகின்றனர்” என காவல்துறை யைச் சேர்ந்த சிலர் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT