Last Updated : 01 Feb, 2015 01:00 PM

 

Published : 01 Feb 2015 01:00 PM
Last Updated : 01 Feb 2015 01:00 PM

போலீஸ்காரரின் சைக்கிளை ஓட்டிய சிறுமியை மிரட்டியதால் தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் போலீஸ்காரர் ஒருவரின் சைக்கிளைக் கள்ளத்தனமாக‌ ஓட்டிய சிறுமியைக் கைது செய்வதாக மிரட்டிய‌தால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

காவல்துறை உதவி ஆய்வாளராக இருப்பவர் பிரகாஷ் ஜரோலியா. இவரது சைக்கிளை இவரின் அனுமதியில்லாமல் யாஸ்மின் (11) எனும் சிறுமி ஓட்டினார்.

அதனால் கோபமடைந்த ஜரோலியா அந்தச் சிறுமியை அடித்ததோடு கைது செய்யப் போவதாகவும் மிரட்டினார்.

இதனால் மனமுடைந்த யாஸ்மின் தன் வீட்டுக்கு வந்து தீக்குளித்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த போலீஸார், சிறுமியை மிரட்டியதற்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி ஜரோலி யாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் ஜரோலியாவும் அவரது குடும்பத்தினரும் அவர்களின் வீட்டைப் பூட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே, யாஸ்மினின் தாய் ரெஹானா பி, தான் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜரோலியாவே வந்து யாஸ்மினின் மீது தீ வைத்துவிட்டுப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x