கருணாநிதி பிரச்சாரம்: திரளாக பங்கேற்க தொ.மு.ச-வினருக்கு வேண்டுகோள்

கருணாநிதி பிரச்சாரம்: திரளாக பங்கேற்க  தொ.மு.ச-வினருக்கு வேண்டுகோள்
Updated on
1 min read

கருணாநிதி பிரச்சாரக் கூட்டங்களில் தொ.மு.ச. உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று தொ.மு.ச. தலைவர் பேரூர் ஆ.நடராசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய சலுகைகளை கருணாநிதி வழங்கியுள்ளார். மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கினார். போனஸ் உச்சவரம்பை நீக்கி 20% உயர்த்தி ரூ.8,400 வழங்கினார். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் அமைக்கப்பட்டன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த காலத்தை 5 ஆண்டில் இருந்து 3 ஆண்டாக மாற்றினார். மே தினத்துக்கு விடுமுறை அளித்ததுடன் மேதினப் பூங்காவை உருவாக்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நடராசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in