Published : 05 Feb 2015 06:00 PM
Last Updated : 05 Feb 2015 06:00 PM
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை சட்ட கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தனர். தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டம் மதுரையிலும் தொடர்ந்தது. மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சட்டக் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட நீதிமன்றம் எதிரே திடீர் மறியல் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, சேலம், நெல்லை, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களும், திருவாரூர் திருவிக கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT