எழும்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

எழும்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
Updated on
1 min read

வழக்கறிஞர் கொலை செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எழும்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல், கடந்த 31-ம் தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஸ்டாலின் என்ற வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் குட்டியப்பன் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட மைக்கேல் உட்பட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறி ஞர்கள் லோகேஸ்வரி, ராஜேஷ், சார்லஸ், முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக இருக்கும் மற்றவர் களை சரண் அடையும் முன்பு பிடிப்பதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு கொலை சம்பவம் நடந்தது. 2 நாள் விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் நேற்று செயல்படத் தொடங்கியது.

அனைத்து வழக்கறிஞர்களும் ஸ்டாலின் கொல்லப்பட்டதைக் கண்டித்து துக்க தினமாக அனு சரித்தனர். மேலும், நீதிமன்றப் பணிகளை புறக் கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் வழக்கு விசாரணைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in