Published : 27 Feb 2015 10:03 PM
Last Updated : 27 Feb 2015 10:03 PM
கூடங்குளம் 2வது அணு உலையில் நாளை வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அணுஉலைகள் மூலம் 5,497 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடங்குளம் முதலாவது அணுஉலையில் இதுவரை 462 கோடி மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது அணுஉலையில் நாளை வெப்பநீர் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சோதனை பகலில் மட்டும் தான் நடைபெறும். இந்த சோதனை காரணமாக சத்தம் வெளிப்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படாது. நாளை முதல் ஒரு வாரம் சோதனை நடைபெற உள்ளது.
கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளுக்கான பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT