Published : 19 Feb 2015 11:25 AM
Last Updated : 19 Feb 2015 11:25 AM

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்கள்

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிவகங்கை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்ய அரசு ஆவன செய்யுமா என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

காற்றின் வேகம், அழுத்தம் ஆகியவற்றை பொருத்தே காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றின் வேகம் மற்றும் அழுத்தம் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றாலை மின் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் உரிய ஆவணங்களுடன் தனியார் தொழில் முனைவோரிடம் இருந்து பெறப்பட்டால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x