Published : 11 Feb 2015 03:00 PM
Last Updated : 11 Feb 2015 03:00 PM

மோடிக்கு அல்ல... பேடிக்கு ஏற்பட்ட தோல்வி: தமிழிசை



டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதற்கு மோடியை காரணம் கூற முடியாது என்றார் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு பிரதமர் மோடி காரணமல்ல, அது கிரண்பேடிக்கு ஏற்பட்ட தோல்வி.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து முடித்துவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் துணை ராணுவப் படையினரை வைத்து தற்போது சோதனையிடுவது காலம் கடந்த செயல்.

அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். பாஜகவினர் மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தோம். ஆனால், காவல் துறையினர் புகார் கொடுத்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x