Published : 19 Feb 2015 09:25 AM
Last Updated : 19 Feb 2015 09:25 AM

காஞ்சியில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு டாமி ப்ளூ மாத்திரை விநியோகம்

காஞ்சிபுரம் நகரில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு ‘டாமி ப்ளூ’ மாத்திரைகளை வழங்கி வருகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் வகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தமீன் அன்சாரி (25). இவர், கோயம்புத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 7 நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில், தமீன் அன்சாரிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அரசு மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தமீன் அன்சாரி, பன்றிக் காய்ச்ச லுடனேயே பாலுசெட்டி பகுதி யில் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளதால், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி வாசிகளுக்கு சுகாதாரத் துறை யினர் ‘டாமி ப்ளூ’ மாத்திரையை வழங்கி வருகின்றனர்.

இதேபோல், காஞ்சிபுரம் சண்முகா நகர் பகுதியில் வசிப்பவர் அருள் (36). இவர், காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய் தனர். இதையடுத்து சண்முகா நகர் பகுதியிலும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

ஒரேநேரத்தில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் ஏற் பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள் ளது. எனினும், பன்றிக் காய்ச் சல் நோய் தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: பன்றிக் காய்ச்சல் நோயை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இந்த நோயை கட்டுப்படுத்துவற்காக அனைத்து சிகிச்சை முறைகளையும் சுகா தாரத் துறை தயார் நிலையில் வைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் நபர் களுக்கு, தனியாக சிகிச்சை அளிப்பதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், தனி வார்டுகள் ஏற் படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

பன்றிக் காய்ச்சல் நோய் அனை வருக்கு வருவது கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை மட்டுமே இந்த நோய் தாக்கும். 101 டிகிரிக்கு மேலாக காய்ச்சல் அடித்து, 3 நாட்களாக காய்ச்சலின் அளவு குறையாமல் இருந்தால், அவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x