Published : 24 Jan 2015 09:35 AM
Last Updated : 24 Jan 2015 09:35 AM
சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.
வடசென்னையை சேர்ந்தவர் லலிதா (26). கடந்த வாரம் ஹைதராபாத் சென்று வந்ததில் இருந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனக்கும் பன்றிக் காய்ச்சல் இருக்குமோ என்ற சந்தேகத்தில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 3 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். அவரை தனி வார்டில் அனுமதித்த டாக்டர்கள், சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதேசமயத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை மண்ணடியை சேர்ந்த ரயில்வே ஊழியர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT