Published : 05 Jan 2015 11:11 AM
Last Updated : 05 Jan 2015 11:11 AM

தவறான தொடர்பால் சிதைந்த குடும்பங்கள்: பெண்ணை கொன்று கார் டிரைவர் தற்கொலை

திருமங்கலத்தில் பெண்ணை கொலை செய்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் தவறான தொடர்பால் இரு குடும்பங்களும் சிதைந்துவிட்டன.

சென்னை திருமங்கலம் தென்றல் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் பிரியா (32). இவரது கணவர் தட்சிணாமூர்த்தியை பிரிந்து வாழ்கிறார். 10 வயது மகளும் தந்தையிடமே வளர்கிறார். பிரியா அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்த கார் டிரைவர் இளையராஜா(34) என்பருக்கும், பிரியாவுக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டது. இளையராஜாவுக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 7 வயதில் மகளும் உள்ளனர்.

இளையராஜா, பிரியாவின் தொடர்பு குறித்து அறிந்த லதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரியாவை தனது வீட்டுக்கே அழைத்து வந்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார் இளையராஜா. ஒரே வீட்டில் லதாவும், பிரியாவும் வசிக்க அவர்களுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட, வீட்டைவிட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கினார் பிரியா.

சில நாட்கள் தனியாக விடுதியில் தங்கி இருந்த பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் தென்றல் காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கே மீண்டும் சென்றார். பிரியாவின் தாய் குவைத்தில் உள்ள தனது தம்பியின் வீட்டுக்கு சென்றுவிட்டதால் வீட்டில் பிரியா மட்டும் தனியாக இருந்தார். இதனால் இளையராஜா அடிக்கடி பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் பிரியாவுக்கு வேறொரு நபருடனும் தொடர்பு இருப்பது இளையராஜாவுக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே ன சண்டை ஏற்பட்டது. கடந்த 31-ம் தேதி இரவு பிரியாவின் வீட்டுக்கு இளையராஜா சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ாக்குவாதம் ஏற்பட பிரியாவை கட்டிலில் வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் இளையராஜா. பின்னர் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு இளையராஜாவும் தற்கொலை செய்து கொண்டார்.

இரு நாட்களாக இளையராஜா வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, பிரியாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து தெரியவர, இருவரின் செல்போனுக்கும் தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் இல்லை.

இந்நிலையில் பிரியாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் கொடுக்க, திருமங்கலம் போலீஸார் நேற்று காலையில் பிரியா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கட்டிலில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிரியா மற்றும் தூக்குப்போட்ட நிலையில் இளையராஜாவின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இளையராஜா, பிரியாவின் தவறான தொடர்பால் ஏற்பட்ட விபரீத முடிவு அவர்களின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x