Published : 07 Jan 2015 09:55 AM
Last Updated : 07 Jan 2015 09:55 AM

ரயில் தண்டவாளத்தில் விரிசல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் இருப்புப் பாதையில் கோடம்பாக்கம் அருகே திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால், ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர், விழுப்புரம் வரையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் இருப்புப் பாதையில் கோடம்பாக்கம் அருகே விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் கோடம்பாக்கத்துக்கும், மாம்பலத்துக்கும் இடையே நேற்று காலை 11.15 மணிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிலர் ரயிலில் இருந்து இறங்கி நடந்து சென்றனர்.

இதேபோல், மற்ற மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பின்னர், ரயில்வே தொழில்நுட்ப பிரிவினர் வந்து இருப்புப்பாதை விரிசலை சரிசெய்தனர்.

இதனால், இந்த பகுதியில் ஒரு மணிநேரம் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x