Published : 02 Jan 2015 12:50 PM
Last Updated : 02 Jan 2015 12:50 PM

கோவையில் புத்தாண்டு கொண்டாட்ட விபத்தில் 2 பேர் பலி

கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். மனைவி ஸ்டெல்லா மேரி. புத்தாண்டை முன்னிட்டு காளப் பட்டி பகுதியில் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டு நேற்று முன் தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காளப்பட்டி சாலையில் எதிரே வந்த மோட்டார் பைக்கும், பிரான்சிஸ் சேவியரின் மோட்டர் பைக்கும் மோதிக் கொண்டன. படுகாயம் அடைந்த இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரான்சிஸ் சேவியர் உயிரிழந்தார்.

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ம் ஆண்டு படித்து வந்தார். புத்தாண்டை முன்னிட்டு பைக்கில் தனது நண்பர் பிரேம்குமாருடன்

சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே சென்றபோது சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி படுகாயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சந்தோஷ்குமார் இறந்தார். இதேபோல், மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற சாலை விபத்துகளில் 14 பேர் காயம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x