Published : 22 Jan 2015 09:33 AM
Last Updated : 22 Jan 2015 09:33 AM

மக்களை புண்படுத்துவதா கருத்து சுதந்திரம்?- ராம கோபாலன் கேள்வி

இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்செங்கோட்டுக்கு புகழ் சேர்க்கும் சிவபெருமானின் திருவிளை யாடலை எழுத்தாளர் பெருமாள் முருகன் கொச்சைப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வருத்தம் தெரிவித்து, அந்த நூலை திரும்ப பெற எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்ச் செல்வன் இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாத நபர் கொடுத்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது விசித்திரமாக உள்ளது.

இந்நூலால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தை அறிய நீதிபதிகள் என்ன முயற்சி எடுத்தார்கள்? திருச்செங்கோடு பகுதி மக்களின் முன்னோர்களை கதை என்ற பெயரில் கொச்சைப்படுத்திய நூலை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நியாயப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் திருச்செங்கோடு மற்றும் கொங்கு மண்டல மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x