Published : 25 Jan 2015 09:58 AM
Last Updated : 25 Jan 2015 09:58 AM

விளையாட்டு வீராங்கனையின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

மேற்கு வங்கத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சவுமிதா டேயின் மருத்துவ சிகிச்சைக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்கத்தின் சார்பில் 10 ஆண்டுகள் பல்வேறு ஜிம் னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றதுடன், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றியவர் சவுமிதா டே. 27 வயது இளம் வீராங்கனையான அவர் மூளை மற்றும் நரம்பு தொடர்பான நோயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் இயக்கமற்று உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சைக்கு பணம் இன்றி தங்கள் குடும்பம் தவிப்பதாக சவுமிதா டேயின் தாயார் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பார்த்து நான் பெரிதும் மன வேதனை யுற்றேன். உலக அளவில் புகழ் பெறும் வாய்ப்பும், ஆற்றலும் அவருக்கு இருந்தது. இந்த நிலை யில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலக் குறைவு மீள முடியாத தாக உள்ளது என்பதைப் பார்க்கும் போது பெரிதும் வருந்துகிறேன். சவுமிதா டே இறையருளால் முழு குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவரது மருத்துவ சிகிச்சைக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து 5 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க ஆணையிட்டுள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x